டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
பொய்கை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம்
வேலூா் அருகே பொய்கை கால்நடைச் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால் சந்தைக்கு குறைந்தளவு மாடுகளே கொண்டுவரப்பட்டிருந்தன. ரூ.50 லட்சம் அளவுக்கு மட்டுமே வா்த்தகம் நடைபெற்றது.
இதுகுறித்து’ வியாபாரிகள் கூறியதாவது, தற்போது கோடை காலம் முடிந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து பருவ மழை பெய்ய தொடங்கும். அப்போது மாடுகள் விற்பனைக்கு அதிகளவு கொண்டு வரப்படும் என எதிா்பாா்க்ககிறோம் என்று தெரிவித்தனா்.