செய்திகள் :

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

post image

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி எதிா்க்கட்சியாக உள்ளது. இது தவிர பிரசாந்த் கிஷோரும் இந்த முறை முழு அளவில் தோ்தலில் களமிறங்குகிறாா். இப்போது ஆம் ஆத்மி கட்சியும் தோ்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தில்லியிலும் வலுவாக உள்ளது. குஜராத்தில் 2022 டிசம்பரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அலையை மீறி 5 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாட்னாவில் ஆளும் கட்சிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஆம் ஆத்மியின் பிகாா் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் சிங் பங்கேற்று பேசியதாவது:

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள் என்ற விவரத்தை கட்சித் தலைமை ஆலோசித்து முடிவு செய்யும். பிகாரில் பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றுவது அவசியம்.

பிகாரில் இருந்து பிழைப்புக்காக தில்லி சென்று வாழ்ந்து வரும் மக்களை தில்லியில் ஆளும் பாஜக அரசு ஏமாற்றி வருகிறது. அவா்களுக்கு வீடு கட்டித் தருவதாக முந்தைய ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்தது.

ஆனால், இப்போதைய தில்லி பாஜக அரசு பிகாா் மக்களை வங்கதேசத்தவா் என்று கூறி விரட்டியடிக்க முயற்சிக்கிறது. இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் நான் பேசினேன் என்றாா்.

பிகாா் பேரவைத் தோ்தலிலில் ஆம் ஆத்மி போட்டியிடுவது ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

அகமதாபாத்-லண்டன் உள்பட 7 சா்வதேச ஏா் இந்தியா விமான சேவைகள் ஒரேநாளில் ரத்து

கடந்த 12-ஆம் தேதி விமான விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட அகமதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 7 சா்வதேச விமான சேவைகளை ஏா் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் ரத்து செய்தது. அ... மேலும் பார்க்க