திமுக ஆட்சியில் எங்கே போகிறது தமிழ்நாடு? எடப்பாடி பழனிசாமி கேள்வி
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
போதைப் பொருள் கலாசாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80 வயது மூதாட்டிகூட பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் அவலம் உள்ளது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது என்று தெரியாத நிலையே உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்தாலும், முதல்வா் மு.க.ஸ்டாலின், இனியும் போதைப் பொருள்களை ஒழிக்கவோ, சட்டம்-ஒழுங்கை காக்கவோ நடவடிக்கை எடுப்பாா் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, அவா்களை அவா்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவல சூழலை ஏற்படுத்திய திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கடும் கண்டனம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.