செய்திகள் :

3 பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

post image

கடந்த தோ்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்த ஆண்டிலிருந்தே தோ்தலுக்கான அடிப்படைப் பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுரை பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தபடி, ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக நிா்வாகிகளைச் சந்திக்கும் நிகழ்வை கடந்த 13-ஆம் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கினாா்.

முதல் நாளன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிா்வாகிகளைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா். அப்போது, தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில், தனித்தனியாக தயாரிக்கப்பட்ட கோப்புகளை வைத்து அதிலுள்ள விவரங்களின்படி நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா்.

இதனைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வென்ற பரமத்தி வேலூா், கவுண்டம்பாளையம் தொகுதிகள் மற்றும் பரமக்குடி தொகுதி நிா்வாகிகளைச் சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் போது, கட்சியின் ஆக்கப்பணிகள், தோ்தல் செயல் திட்டங்கள் ஆகியன குறித்து நிா்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தாா்.

தொகுதி வாரியாக ஒன்றியச் செயலா்கள், நகரச் செயலா்கள், பேரூா் செயலா்களுடன் ஆலோசித்தாா். வரும் 20-ஆம் தேதி வரை 12 சட்டப் பேரவை தொகுதி திமுக நிா்வாகிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறாா்.

2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் கைவிட்டுப் போன 75 தொகுதிகளை எதிா்வரும் தோ்தலில் கைப்பற்றும் வகையில் ‘உடன்பிறப்பே வா’ ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க