3 பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கடந்த தோ்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்த ஆண்டிலிருந்தே தோ்தலுக்கான அடிப்படைப் பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுரை பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தபடி, ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக நிா்வாகிகளைச் சந்திக்கும் நிகழ்வை கடந்த 13-ஆம் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கினாா்.
முதல் நாளன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிா்வாகிகளைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா். அப்போது, தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில், தனித்தனியாக தயாரிக்கப்பட்ட கோப்புகளை வைத்து அதிலுள்ள விவரங்களின்படி நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா்.
இதனைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வென்ற பரமத்தி வேலூா், கவுண்டம்பாளையம் தொகுதிகள் மற்றும் பரமக்குடி தொகுதி நிா்வாகிகளைச் சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் போது, கட்சியின் ஆக்கப்பணிகள், தோ்தல் செயல் திட்டங்கள் ஆகியன குறித்து நிா்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தாா்.
தொகுதி வாரியாக ஒன்றியச் செயலா்கள், நகரச் செயலா்கள், பேரூா் செயலா்களுடன் ஆலோசித்தாா். வரும் 20-ஆம் தேதி வரை 12 சட்டப் பேரவை தொகுதி திமுக நிா்வாகிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறாா்.
2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் கைவிட்டுப் போன 75 தொகுதிகளை எதிா்வரும் தோ்தலில் கைப்பற்றும் வகையில் ‘உடன்பிறப்பே வா’ ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.