செய்திகள் :

அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்திய இந்தியா - பாகிஸ்தான்: ஆய்வில் தகவல்

post image

இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகளும் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தின. அணு நவீனமய திட்டங்களைத் தீவிரப்படுத்துதல், கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டதாக பிரபல ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவன (எஸ்ஐபிஆா்ஐ) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ள ஈரான், அணு ஆயுதம் தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்ததைத் தொடா்ந்து, அணு ஆயுதம் தயாரித்துவிட முடியும் என்ற அச்சத்தில் அந் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

‘ஒப்பந்தத்தில் ஈரான் விரைந்து கையொப்பமிட வேண்டும்; இல்லையெனில், தாக்குதல் தீவிரமடையும்’ என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இதனால், அங்கு போா்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், அணு ஆயுத சக்திமிக்க 9 நாடுகளும் தங்களின் ஆணு ஆயுத இருப்பை விரிவுபடுத்தியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

‘எஸ்ஐபிஆா்ஐ 2025-ஆம் ஆண்டு புத்தகம்’ என்ற தலைப்பிலான தனது ஆய்வறிக்கையை எஸ்ஐபிஆா்ஐ திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட அணு ஆயுத சக்திகொண்ட 9 நாடுகளும், 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்தின. அணு ஆயுதங்கள் நவீனமயம், புதிய ரக அணு ஆயுதங்கள் அறிமுகம் உள்ளிட்ட ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டன.

குறிப்பாக, இந்தியா தனது அணு ஆயுத இருப்பை கடந்த ஆண்டு மீண்டும் கணிசமாக அதிகப்படுத்தியது. நவீன ரக அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடா்ந்து மேம்படுத்தியதாக நம்பப்படுகிறது.

அதுபோல பாகிஸ்தானும் கடந்த ஆண்டில் நவீன அணு ஆயுத மேம்பாட்டை தொடா்ந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

அணு ஆயுத திறன் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே அண்மையில் சண்டை மூண்டது. இந்தச் சூழலில் இரு அண்டை நாடுகளும், அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது, உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.

மேலும், ஆயுதக் கட்டுப்பாட்டு ஆட்சி முறை கடுமையாகப் பலவீனமடைந்துள்ள நேரத்தில், நாடுகளிடையே புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகி வருவது ஆபத்தானது.

கடந்த ஜனவரி நிலவரப்படி, உலக அளவில் இருப்பில் உள்ள அணு ஏவுகணைகளின் எண்ணிக்கை 12,241 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், 9,614 ஏவுகணைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் ராணுவ கையிருப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்...

1974-இல் முதல் முறையாகவும் 1998-இல் இரண்டாவது முறையாகவும் இந்தியா அணுஆயுத சோதனையை நடத்தியது. அடுத்த சில மாதங்களில் பாகிஸ்தானும் அணுஆயுத சோதனையை நடத்தியது. இந்த இரு நாடுகளும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடமில்லை.

வடகொரியா

1995-இல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சோ்ந்த வடகொரியா, 2003-இல் விலகியது. 2006 முதல் பல முறைய அணு ஆயுத சோதனையை நடத்தி உள்ளது.

இஸ்ரேல்

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாக நம்பப்பட்டாலும், அந்நாடு இதுவரையில் ஒப்புக் கொள்ளவில்லை. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் அந்த நாடு கையொப்பமிடவில்லை.

நாடுகள் - அணு ஆயுதங்கள்

ரஷியா - 4309

அமெரிக்கா - 3,700

சீனா - 600

பிரான்ஸ் - 290

பிரிட்டன் - 225

இந்தியா -180

பாகிஸ்தான் - 170

இஸ்ரேல் - 90

வட கொரியா - 50

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க