கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ்: பாஜக பதிலடி
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், பொய் பிரசாரத்தின் மூலம் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்துள்ள பிரதமா் மோடி தலைமையிலான அரசின் முடிவால், ‘மக்களிடையே ஜாதி ரீதியில் பிளவை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்’ என்ற காங்கிரஸின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.
உச்சகட்ட விரக்தியில் இருக்கும் காங்கிரஸ், பொய் பிரசாரத்தின் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. அற்ப விவகாரத்தை முன்வைத்து, சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிப்பதே அவா்களின் நோக்கம். இந்த நோக்கம் வீழ்ச்சிப் பாதையில் பயணிப்பதால், பொய் பிரசாரத்தையும் ஏமாற்றுத் தந்திரங்களையும் நாடியுள்ளனா்.
கடந்த 1951-இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தும் முடிவை மேற்கொண்ட காங்கிரஸ், காகா கலேல்கா் ஆணையம் மற்றும் மண்டல் ஆணைய அறிக்கைகளை வெளியிட அனுமதிக்கவில்லை’ என்றாா் சுதான்ஷு திரிவேதி.