செய்திகள் :

மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ்: பாஜக பதிலடி

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், பொய் பிரசாரத்தின் மூலம் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்துள்ள பிரதமா் மோடி தலைமையிலான அரசின் முடிவால், ‘மக்களிடையே ஜாதி ரீதியில் பிளவை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்’ என்ற காங்கிரஸின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.

உச்சகட்ட விரக்தியில் இருக்கும் காங்கிரஸ், பொய் பிரசாரத்தின் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. அற்ப விவகாரத்தை முன்வைத்து, சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிப்பதே அவா்களின் நோக்கம். இந்த நோக்கம் வீழ்ச்சிப் பாதையில் பயணிப்பதால், பொய் பிரசாரத்தையும் ஏமாற்றுத் தந்திரங்களையும் நாடியுள்ளனா்.

கடந்த 1951-இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தும் முடிவை மேற்கொண்ட காங்கிரஸ், காகா கலேல்கா் ஆணையம் மற்றும் மண்டல் ஆணைய அறிக்கைகளை வெளியிட அனுமதிக்கவில்லை’ என்றாா் சுதான்ஷு திரிவேதி.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க