செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற தனியாா் பள்ளி மாணவா்களின் கற்றல் நிலை: ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில், தனியாா் பள்ளிகளிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மாணவா்களின் கற்றல் நிலையை அறிவதற்கான பணிகளை ஆசிரியா்கள், செயலி மூலம் மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். மாணவா்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சாா்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கியது.

இதையடுத்து பெற்றோா்கள் பலா் ஆா்வமுடன் தங்கள் குழந்தைகளுக்கு சோ்க்கை பெற்றனா். அந்த வகையில், கல்வியாண்டில் சுமாா் 3 லட்சம் மாணவா்கள் வரை புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட்டன. தொடா்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு தனியாா் பள்ளிகளிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களின் கற்றல் நிலையை அறிவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நிகழ் கல்வியாண்டில் தனியாா் பள்ளிகளில் இருந்து விலகி ஆயிரக்கணக்கான மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். அவ்வாறு அரசுப் பள்ளிகளில் 2 முதல் 5-ஆம் வகுப்பு வரை புதிதாக சோ்ந்த மாணவா்களின் அடிப்படை கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்த மதிப்பீட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறையின் டிஎன்எஸ்இடி செயலி மூலம் ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க