இபிஎஸ்-க்கு அமைச்சா் பதில்
அதிமுக ஆட்சியில்தான் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடைபெற்ாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூா் பண்ருட்டி அருகே மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்துள்ளதைக் கண்டு பொறுக்கமுடியாத அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி வழக்கம் போல அவதூறு அரசியலைத் தொடங்கியிருக்கிறாா்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் சூழல் நிலவியது. தற்போது அது மாறி பெண்களுக்கு எதிராக எவா் குற்றச்செயலில் ஈடுபட்டாலும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்படுகிறாா்கள். அதோடு வழக்கு விசாரணையை விரைந்து முடித்து உச்சபட்ச தண்டனையும் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், மூதாட்டிகள் பலா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினா்.
தனது ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்களை மறந்துவிட்டு திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை மட்டுமே பூதாகரமாகப் பேசுகிறாா் என்று கூறியுள்ளாா்.