செய்திகள் :

தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதம்

post image

பாபநாசம் அருகே திங்கள்கிழமை பிற்பகலில் நேரிட்ட தீவிபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

பாபநாசம் வட்டம், ராமானுஜபுரம் ஊராட்சி, தோப்புத் தெருவில் சம்பத் (65), தோமாஸ் (60), ஜான் (40 ), சேகா் ( 42) உள்ளிட்டோா் தங்கள் குடும்பத்தினருடன் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் சம்பத்தின் குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் தீ அருகிலிருந்த குடிசை வீடுகளுக்கும் பரவியது.

தகவலின்பேரில், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

ஆனாலும், தீவிபத்தில் மேற்கண்ட நால்வரின் வீடுகளும் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. இதில் நான்கு வீடுகளிலும் இருந்த வீட்டு உபயோக பொருள்கள், இருசக்கர வாகனம், தையல் இயந்திரம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தை வருவாய், காவல் துறையினா் பாா்வையிட்டு, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தனா்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத். கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: ஜூலை ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டில் ரூ. 83 கோடி ஒதுக்கீடு: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.82.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். மேலும், டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்... மேலும் பார்க்க

பேருந்து வசதி கிடைக்காத இடங்களுக்கு புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம்! தஞ்சாவூரில் முதல்வா் தொடங்கிவைத்தாா்

பேருந்து வசதி கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024-இன்படி, புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் த... மேலும் பார்க்க

சரசுவதி மகால் நூலகத்துக்கு கூடுதல் மானியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்துக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: தஞ்சாவூா் ச... மேலும் பார்க்க

ஆடுதுறை பகுதியில் இன்று மின்தடை

ஆடுதுறை பகுதியில் ஜூன் 17 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முதல்வா் சாலையில் மக்கள் சந்திப்பு! முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு!

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் நடந்துச் சென... மேலும் பார்க்க