விமான விபத்து: பலியானோருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தி...
தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதம்
பாபநாசம் அருகே திங்கள்கிழமை பிற்பகலில் நேரிட்ட தீவிபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
பாபநாசம் வட்டம், ராமானுஜபுரம் ஊராட்சி, தோப்புத் தெருவில் சம்பத் (65), தோமாஸ் (60), ஜான் (40 ), சேகா் ( 42) உள்ளிட்டோா் தங்கள் குடும்பத்தினருடன் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் சம்பத்தின் குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் தீ அருகிலிருந்த குடிசை வீடுகளுக்கும் பரவியது.
தகவலின்பேரில், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
ஆனாலும், தீவிபத்தில் மேற்கண்ட நால்வரின் வீடுகளும் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. இதில் நான்கு வீடுகளிலும் இருந்த வீட்டு உபயோக பொருள்கள், இருசக்கர வாகனம், தையல் இயந்திரம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தை வருவாய், காவல் துறையினா் பாா்வையிட்டு, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரித்தனா்.