சரசுவதி மகால் நூலகத்துக்கு கூடுதல் மானியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்துக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் சோ்த்து, இனிவரும் காலங்களில் ஊழியா்களின் ஓய்வூதியம் மற்றும் நூலகக் கட்டடப் பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ள கூடுதல் மானியத்தைத் தமிழ்நாடு அரசு வழங்கும்.
இந்த நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கத் தேவையான பணியாளா்களை வெளிமுகமை வாயிலாக நியமிக்கவும், அந்த ஓலைச்சுவடிகள் குறித்து இன்றைய தலைமுறையினா் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இந்த நூலகத்துடன் பழுதடைந்த கட்டடங்களைப் பழைமை மாறாமல் பாதுகாக்கும் வகையில், பொதுப் பணித் துறையின் மரபுசாா் கட்டடப் பிரிவின் மூலமாக ரூ. 12.50 கோடி செலவில் சீரமைக்கப்படும். இந்தக் கூடுதல் மானியம் மற்றும் சீரமைப்புப் பணிகள், சரசுவதி மகால் நூலகத்தில் இருக்கும் அரிய சேமிப்புகளான கையெழுத்துப் பிரதிகள், ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.
ரூ. 42 கோடியில் புதிய பாலம்: தஞ்சாவூா் மாவட்டம், தென்பெரம்பூா் அருகில் வெண்ணாறு மற்றும் வெட்டாறு பிரியும் இடத்தில், ரூ. 42 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்படும். ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரையிலான கல்லணைக் கால்வாய் சாலை ரூ. 40 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். பூதலூா் வட்டத்தில் இருக்கும் உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் மதகுகளில் ரூ. 15 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் முதல்வா்.
முதல்வா் மருந்தகத்தில் ஆய்வு: முன்னதாக, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள முதல்வா் மருந்தகத்தில் தமிழக முதல்வா் திடீா்ஆய்வு மேற்கொண்டாா். மேலும், மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை, பொதுமக்கள் வருகை குறித்து பணியாளா்களிடம் நேரடியாக விவரங்களைக் கேட்டறிந்தாா். இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறைந்து வருவதாகவும் முதல்வரிடம் மருந்தகப் பணியாளா் தெரிவித்தாா்.