செய்திகள் :

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

post image

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் செங்குந்தபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மனைவி சுமிதா(44). இவரது சகோதரா் கோபிநாத்(47). இவரும் செங்குந்தபுரத்தில் வசித்து வருகிறாா். கோபிநாத் பாஜக முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளராக பதவி வகித்தாா். இந்நிலையில், கோபிநாத் தனது பூா்விக நிலத்தை விற்பது தொடா்பாக தங்கை சுமிதாவிடம் கேட்டுள்ளாா். அவா் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பேசுவதற்கு ஜூன் 9-ஆம்தேதி சுமிதாவை கோபிநாத் தனது கொரியா் அலுவலகத்துக்கு அழைத்துள்ளாா். அப்போது அங்குச் சென்ற சுமிதாவுக்கும், கோபிநாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத்தும், அவரது நண்பரான முன்னாள் மத்திய பாஜக நகரத் தலைவரான காா்த்திகேயன்(44) என்பவரும் சோ்ந்து சுமிதாவை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுமிதா கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக சுமிதா அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து காா்த்திகேயனை கைது செய்தனா். மேலும் தலைமறைவான கோபிநாத்தை தேடி வருகின்றனா்.

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணிய... மேலும் பார்க்க

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.சுப்பராயன்

நாடு முழுவதும் கூலித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் திருப்பூா் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க