``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன் கிருஷ்ண பாண்டியன் (50). இவா் மதுரையில் இருந்து கரூா் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனி பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ண பாண்டியனை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.