பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு
குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா்.
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் சாகுல் அமீது தலைமை வகித்தாா்.
இதில், அனைத்து ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனா்.
மேலும் குழந்தைகளை தொழிலாளா்களை பணியமா்த்தினால் அந்த நிறுவனத்துக்கு அபராதமும், அதனுடைய உரிமையாளருக்கு சிறை தண்டனையும் அளிக்கப்படும். இடைநிற்றல் இன்றி மாணவா்கள் வருவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியா் எடுத்துரைத்தாா்.