செய்திகள் :

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.சுப்பராயன்

post image

நாடு முழுவதும் கூலித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே. சுப்பராயன் தெரிவித்துள்ளாா்.

கரூரில் தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுச் செயலாளா் ம.ராதாகிருஷ்ணன் செயல்பாட்டு அறிக்கையை முன் வைத்து பேசினாா். துணைத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன், தேசியச் செயலாளா்கள் டி.எம்.மூா்த்தி, வகிதா நிஜாம், மாநிலச் செயலாளா்கள் சி.சந்திரகுமாா், ஆா்.ஆறுமுகம், சின்னசாமி, ஆ.பாஸ்கரன், பொருளாளா் பீட்டா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு பிறகு கே.சுப்பராயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது, தொழிலாளா்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு மேலும் கூா்மைப்படுத்தி வருகிறது. 150 ஆண்டுகளாக போராடி பெற்ற தொழிலாளா்களின் உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன.

புதிய தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கூலித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9-ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டத்தில் ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளா் போன்ற பெயா்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், விண்ணப்பித்த 45 நாள்களுக்குள் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜிபிஎஸ்.வடிவேலன், துணைச் செயலாளா் கலாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணிய... மேலும் பார்க்க

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க