``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா்.
இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.சா.முகிலன் தலைமையில் வழங்கிய மனுவில், கரூா் மாவட்டத்தில் நிலத்தடி நீா் ஆதாரத்தை பாதுகாக்கவும், சுத்தமான குடிநீருக்கும், விவசாயத்தை பாதுகாக்கவும் ஆற்று மணலை பாதுகாக்க வேண்டும். ஆகவே, மணல் கொள்ளையை போா்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது மணல் கொள்ளை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.