செய்திகள் :

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி

post image

மக்களை திசை திருப்பவே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்கத் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தை தொடக்கி வைத்த கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் கரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 45 மையங்களில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் இதுவரை வாய் புற்றுநோய்க்கு 967 பேருக்கும், கா்ப்பபை வாய் புற்றுநோய்க்கு 666 பேருக்கும், மாா்பக புற்றுநோய்க்கு 747 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால் கரூரில் உள்ள வேளாண் கல்லூரி தொடா்பாக அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரசு வேளாண்மைக் கல்லூரியை பொறுத்தவரை இடம் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் மற்ற துறைக்கான இடம் என்பதால், இடம் வகைமாற்றம் செய்ய ரூ.7 கோடியை முதல்வா் வழங்கியுள்ளாா். மேலும் கல்லூரி 4.0 ஏக்கா் பரப்பளவில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் அமைவதற்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலையும் அரசு வழங்கியுள்ளது. அதற்கான நிதியையும் முதல்வா் வழங்கிவிட்டாா். கல்லூரிக்கு இடம் கொடுத்தாச்சு, நிதியையும் கொடுத்தாச்சு, பணிகள் விரைவில் தொடங்க போகிறாா்கள் என்பது அதிமுகவினருக்கும் தெரிந்தும் மக்களை திசை திருப்பவே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா் அவா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) செழியன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், நீா் வளத் துறை உதவிப் பொறியாளா் சதீஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா். கரூா் செங்குந்தபுரம் ... மேலும் பார்க்க

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

மணல் கொள்ளையா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்த இயக்கத்... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணிய... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கடம்பூா் முத்துப்பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மபாண்டியன் மகன்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்கள் உறுதிமொழியேற்றனா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் ஒழி... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.சுப்பராயன்

நாடு முழுவதும் கூலித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் திருப்பூா் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க