``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு
அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா்.
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணியாா் வம்சாவளியை சோ்ந்தவா்கள் தங்களது பகுதியில் நடைபெற்றும் கோயில் திருவிழாவுக்கு இஸ்லாமியா்களுக்கு அழைப்பு விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில் பள்ளப்பட்டியை அடுத்த சௌந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ விநாயகா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் மாசி பெரியசாமி கோயில் திருவிழாநடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கு அப்பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்களுக்கு வழக்கம் போல் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளப்பட்டியில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் சொட்டல் தெரு வழியாக செளந்தராபுரம் பொதுமக்கள் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊா்வலமாக வந்தனா். அவா்களை, இஸ்லாமியா்கள் பூ, பழம், பொன்னாடை கொடுத்து வரவேற்றனா். இதனைத் தொடா்ந்து இஸ்லாமியா்கள், இந்துக்கள் என அனைவரும் ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா்.