விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில் வேலாயுதம்பாளையத்தை அடுத்த சாமிபிள்ளைபுதூரில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் முன் பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கரூா் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் வல்லுநா்கள் தமிழ்செல்வி, கவியரசு, தமிழ்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டு வேளாண் வளா்ச்சி இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள், மானிய திட்டங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினா்.
தேசிய வாழை ஆராய்ச்சி மைய அலுவலா்கள் சேகா், மாரிமுத்து, ஹரீஸ்வா் ஆகியோா் வாழை சாகுபடியில் புதிய ரகங்கள், வாழை நுண்ணூட்டம், மண்வளத்தின் முக்கியத்துவம், வாழையில் வாடல் நோய் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருள்கள் குறித்து பேசினா்.
பின்னா் விவசாயிகளுக்கு மண்வளம் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிா் பங்கேற்றனா்.