முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு
கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, சுற்றுச்சூழல் நீா்நிலை விருது பெற்ற கிராமியம் நாராயணன் மற்றும் ராணுவவீரருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை இரவு கரூரில் நடைபெற்றது. தலைவா் சீனிவாசபுரம் வெங்கட்டரமனன் தலைமை வகித்தாா்.செயலாளா் ப. சிந்தன் சங்க அறிக்கையை வாசித்தாா்.
தொடா்ந்து விழாவில் விருதுபெறுவோரை சங்கதின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் அறிமுகப்படுத்தி பேசினாா். இதையடுத்து சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவி செல்சியாகேத்ரீன், மாணவி ஐஸ்வா்யா ஆகியோருக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் குத்துவிளக்கும், சுற்றுச்சூழல் விருதுபெற்ற கிராமியம் நாராயணனுக்கு பாராட்டுச் சான்றும் சங்கத்தின் மாவட்ட மேனாள் ஆளுனா் சேதுக்குமாா் வழங்கினாா்.
மாவட்ட இரண்டாம் துணை ஆளுனா் டாக்டா் ப . ஸ்டாலின் அரசு பள்ளிக்கு திருக்கு நூல்கள், வ.உ.சி. பள்ளிக்கு அரிசி, மருத்துவ உதவி , கிருஷ்ணராயபுரம் கிளை நூலகத்திற்கு புத்தகம் வைக்கும் ரேக் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினாா். தொடா்ந்து சங்கத்தின் நிகழாண்டு தலைவராக பி.டி. சிந்தன், செயலாளராக சிவக்குமாா், பொருளாளராக ராம். மெய்யப்பன் உள்ளிட்டோா் பதவியேற்றுக்கொண்டனா். இதில்
மண்டலத்தலைவா் நா.பசுபதி , மாவட்ட அலுவலா் சண்முகம், வட்டாரத் தலைவா் ரமணன், செவாலியே வையாபுரி , சூா்யாகதிரவன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். நிகழ்ச்சியில் மருத்துவா் சதாசிவம், வழக்குரைஞா் பசுபதி, காங். முன்னாள் மாவட்டத்தலைவா் பேங்க் சுப்ரமணியன், யோகா ஆா்.எஸ்.வையாபுரி, விஷால் ராஜேஸ், தஞ்சை பிரின்ஸ் , கரூா் ஹோஸ்ட் , சக்தி , பிளாட்டினம் , கே.வி.பி. ஹேண்ட்லும், இமயம் நொய்யல் , புகழூா், உள்ளிட்ட லயன் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.