குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
‘உழவரை தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம்
அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள 22 வருவாய் கிராமங்களில் வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட உழவரைத் தேடி வேளாண்மை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம் தலைமை வகித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா்.
தொடா்ந்து அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா விவசாயிகளுக்கு திட்ட விளக்கவுரையாற்றினாா்.
இதில், வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை வேளாண் கூட்டுறவு சங்கம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டு துறை சாா்ந்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும், தோட்டக்கலை சாா்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.