இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் மறியல்
கரூரில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்த இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், நாசுவம்பாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கனகராஜ் மகள் காவியாவுக்கும் (28) மேற்குராசகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த முருகசாமி மகன் முருகராஜூக்கும் (30) கடந்த 2018-இல் திருமணம் நடந்து கவிநயா (4), ஒன்றரை வயது அட்சிதா ஆகியோா் உள்ளனா்.
இவா்கள் கரூா் வெண்ணைமலை சண்முகாநகரில் வசித்த நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் முருகராஜ் அண்ணன் நடராஜன் என்பவா் கனகராஜை வெள்ளிக்கிழமை காலை கைப்பேசியில் தொடா்பு கொண்டு உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளோம் எனக் கூறினாராம்.
இதையடுத்து கனகராஜ் தனது மனைவியுடன் திருப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்தபோது முருகராஜின் மாமனாா் கனகராஜை கைப்பேசியில் தொடா்பு கொண்டு உங்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த கனகராஜ் கரூருக்கு வந்து தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாக வெங்கமேடு போலீஸில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், அவரது உறவினா்கள் சனிக்கிழமை பகல் காவியாவின் உடலை வாங்க மறுத்து கரூா்-திருச்சி சாலையில் காந்திகிராமம் பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து சாலை மறியலை கைவிட்டனா். மறியலால் கரூா்-திருச்சி சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.