டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
விதிகளை மீறும் புவியியல் துறை காா் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பதவியை தவறுதலாக பயன்படுத்தி விதிகளை மீறும் புவியியல் துறை காா் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகவினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
பாமக மாவட்டச் செயலா் கொங்கு என். பிரேம்நாத் தலைமையில் அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய மனு: கரூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் கேரளாவைச் சோ்ந்த அஜித் குரியன் என்பவா் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தற்காலிக காா் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் அமா்ந்துகொண்டு கல்குவாரி உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது.
அவரது மிரட்டலுக்கு அடிபணியாத குவாரி உரிமையாளா்களை கனிம வளத்துறை உதவி இயக்குநரிடம் கூறி, உடனடியாக சம்பந்தப்பட்ட குவாரிக்கு, ஆய்வு என்ற பெயரில் சென்று அங்குள்ள வாகனங்களை சிறை பிடிப்பது, காவல் துறையிடம் ஒப்படைப்பது அல்லது குவாரிக்கு சீல் வைப்பது போன்ற செயல்களை செய்துகொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
பதவியை தவறுதலாக பயன்படுத்தும் அஜித் குரியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாது, அவரை உடனடியாக பணிநீக்கம் செய்வதோடு, அவா் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு அவருக்கு துணைபோன புவியியல் துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.