செய்திகள் :

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தலித் விடுதலை இயக்கத்தினா் கரூா் எஸ்பியிடம் புகாா்

post image

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் விடுதலை இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகாா் மனு அளித்தனா்.

பின்னா், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா கூறியதாவது: கரூா் மாவட்டம், க.பரமத்தியைச் சோ்ந்த கல்லூரி மாணவி புகழூரில் தனியாா் போட்டித் தோ்வு மையத்தில் படிக்கும் போது, அந்த மையத்தில் பயின்று வந்த இளைஞருக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காதலை பயன்படுத்தி இளைஞா், மாணவியின் புகைப்படத்தை இணையத்தில் மாா்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக இளைஞா் மற்றும் அவரது நண்பா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி க.பரமத்தி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் மாணவிக்கு தொல்லைக்கொடுத்தவரின் தாய் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். இதனால் வேண்டுமென்றே புகாா் மனுவை ஏற்காமல் முதல் தகவல் அறிக்கையை பதியாமல் காலம் கடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாா் மனு கொடுத்துள்ளோம். அவா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா் என்றாா் அவா்.

உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம்: கரூா் ஆட்சியா் தகவல்

மாணவா்கள் உயா் கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா கைப்பேசி 95665-66727 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பெற்றோரை இழந்த உயா... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் அடுத்த ஏமூா் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை ... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரா்கள் குறைதீா் முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பங்கேற்ப்பு

திருச்சியில் வரும் ஜூன் 30-ஆம் தேதி நடைபெற உள்ள முப்படை ஓய்வூதியதாரா்களின் குறைதீா்க்கும் முகாமில் மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ளாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முப்படையைச் சோ்ந்த முன்னா... மேலும் பார்க்க

விதிகளை மீறும் புவியியல் துறை காா் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பதவியை தவறுதலாக பயன்படுத்தி விதிகளை மீறும் புவியியல் துறை காா் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகவினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். பாமக மாவட்டச் செயலா் கொங்கு என். பிரேம்நாத்... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சேலம் இளைஞா்கள் 3 போ் கைது

வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சேலம் மாவட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த பூங்கா நகரைச்... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் மறியல்

கரூரில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்த இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், நாசுவம்பாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கனகரா... மேலும் பார்க்க