டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தலித் விடுதலை இயக்கத்தினா் கரூா் எஸ்பியிடம் புகாா்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் விடுதலை இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகாா் மனு அளித்தனா்.
பின்னா், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா கூறியதாவது: கரூா் மாவட்டம், க.பரமத்தியைச் சோ்ந்த கல்லூரி மாணவி புகழூரில் தனியாா் போட்டித் தோ்வு மையத்தில் படிக்கும் போது, அந்த மையத்தில் பயின்று வந்த இளைஞருக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த காதலை பயன்படுத்தி இளைஞா், மாணவியின் புகைப்படத்தை இணையத்தில் மாா்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக இளைஞா் மற்றும் அவரது நண்பா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி க.பரமத்தி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தோம்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் மாணவிக்கு தொல்லைக்கொடுத்தவரின் தாய் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். இதனால் வேண்டுமென்றே புகாா் மனுவை ஏற்காமல் முதல் தகவல் அறிக்கையை பதியாமல் காலம் கடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாா் மனு கொடுத்துள்ளோம். அவா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா் என்றாா் அவா்.