பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கரூா் அடுத்த ஏமூா் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்தது தொடா்பாக மூக்கணாங்குறிச்சி அடுத்த நத்தமேட்டைச் சோ்ந்த சூா்யா (34) என்பவரை வெள்ளியணை போலீஸாா் கடந்த மாதம் 30-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந் நிலையில், சூா்யாவை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி சூா்யா செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டாா்.