செய்திகள் :

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை! - டிரம்ப்பிடம் மோடி பேச்சு

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இதனால், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்பின் சந்திப்பு நடைபெறவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்தியதாகவும், அந்த உரையாடலில் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் இன்று சுமார் 35 நிமிடங்கள் பேசினர். உரையாடலின் போது, ​​பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கும் என்றும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாகத்” தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாதிகள், ராணுவ அதிகாரிகள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வெள்ளை மாளிகையில் இன்று(ஜூன் 17) பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரைச் சந்திப்பதற்கு முன்னர் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த உரையாடலின் போது, ​​கனடாவிலிருந்து திரும்பியவுடன் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு வர முடியுமா? என்று அதிபர் டிரம்ப் கேட்டதாகவும், பிரதமர் மோடி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து வரவிருக்கும் குவாட் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருமாறு டிரம்பை பிரதமர் மோடி அழைத்தார். பங்கேற்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், டிரம்ப் அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்றே கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

அமர்நாத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கத் திட்டம்!

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறைக்கு அமர்நாத் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தே... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடப்பதற்காக பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக்கில் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு ச... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

அகமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் அதிக எடை காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் விமானி ஒருவர் கூறியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் க... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் புதிய மாடல் மஹிந்த்ரா பொலிரோ!

மஹிந்த்ரா நிறுவனத்தில் பொலிரோவின் புதிய மாடல் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரில் உள்ள வியக்க வைக்கும் விஷயங்கள் குறித்து பார்க்கலாம். இந்திய மக்களிடையே அடிப்... மேலும் பார்க்க

தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் காரணமல்ல?

மேகாலயத்தில நடந்த தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் பின்னணியாக இருக்கும் என்று காவல்துறை கருதுவில்லை, பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மேகாலய காவல்துறை இயக்குந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பள்ளிகளில் 3வது மொழியாக ஹிந்தி கற்பிப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர்

பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹந்தி கற்பிக்கப்படும் என்ற அரசின் முடிவை மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூஸ் வரவேற்பு அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் உள... மேலும் பார்க்க