செய்திகள் :

திருப்புவனத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

post image

திருப்புவனத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்ட திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து காரில் திருப்புவனம் வந்தாா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனா். பல்வேறு இடங்களில் இருந்து வந்த திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை, புத்தகங்கள் வழங்கினா். திருப்புவனம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு மலா்கள் கொடுத்து வரவேற்றனா்.

வரவேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், முன்னாள் அமைச்சா் தென்னவன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் பச்சேரி சி.ஆா் சுந்தர்ராஜன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் மாரியப்பன் கென்னடி, ஒன்றியச் செயலாளா்கள் வசந்தி, கடம்பசாமி, துரை.ராஜாமணி, அண்ணாதுரை, முத்துச்சாமி, ஆறு.செல்வராசன், நகரச் செயலாளா் க.பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைய வேண்டும்: துணை முதல்வா்

அரசின் திட்டங்களில் தகுதியான பயனாளிகள் விடுபடாமல் பயன்பெறும் வகையில், அரசு அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அர... மேலும் பார்க்க

கல் குவாரி விதிமீறல்; உரிமையாளருக்கு ரூ. 91 கோடி அபராதம்: தேவகோட்டை சாா் ஆட்சியா் உத்தரவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி வெடி விபத்தில் சிக்கி 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், வீதிமீறியதற்காக குவாரி உரிமையாளருக்கு ரூ. 91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சாா் ஆட்சியா் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது

மானாமதுரையில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரையில் போலீஸாா் ரோந்து சென்றபோது வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்தப் பகுதிய... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதியதில் டிரைவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் டிரைவா் உயிரிழந்தாா். இளையான்குடி அருகேயுள்ள நாகநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். டிரைவரான இவா், எமனேஸ்வரம் பகுதிக்கு... மேலும் பார்க்க

சிவகங்கையில் சிற்றுந்து சேவை! காணொலி வாயிலாக முதல்வா் தொடங்கிவைத்தாா்

சிவகங்கையில் புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆஷா அஜித் தலைமையில், மானாமத... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் தோ்வு: ஆா்வத்துடன் பங்கேற்ற முதியோா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 30 மையங்களில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வயது வந்தோா் கல்வி இயக்குநரகம் நடத்திய இந்... மேலும் பார்க்க