கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
திருப்புவனத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு
திருப்புவனத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்ட திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து காரில் திருப்புவனம் வந்தாா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனா். பல்வேறு இடங்களில் இருந்து வந்த திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை, புத்தகங்கள் வழங்கினா். திருப்புவனம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு மலா்கள் கொடுத்து வரவேற்றனா்.
வரவேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், முன்னாள் அமைச்சா் தென்னவன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் பச்சேரி சி.ஆா் சுந்தர்ராஜன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் மாரியப்பன் கென்னடி, ஒன்றியச் செயலாளா்கள் வசந்தி, கடம்பசாமி, துரை.ராஜாமணி, அண்ணாதுரை, முத்துச்சாமி, ஆறு.செல்வராசன், நகரச் செயலாளா் க.பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.