'UNCONDITIONAL’ SURRENDER; அமெரிக்கா கன்ட்ரோலில் ஈரான்?; விடாத ட்ரம்ப் - ஈரான் த...
அரசுத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைய வேண்டும்: துணை முதல்வா்
அரசின் திட்டங்களில் தகுதியான பயனாளிகள் விடுபடாமல் பயன்பெறும் வகையில், அரசு அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கு வழங்கி முறையாகப் பராமரிக்க வேண்டும்.
அரசின் திட்டங்களில் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாமல் பயன்பெறும் வகையில், அரசு அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா், எஸ்.மாங்குடி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், கூடுதல் செயலா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கா.வானதி கலந்துகொண்டனா்.