கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி- காங்கிரஸ் அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே தெரிவித்தாா்.
கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் காங்கிரஸ் வென்றது. சமாஜவாதி கட்சி 37 இடங்களில் வென்றது.
இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வென்றது. இதுவே மக்களவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற முடியாததற்கு காரணமாக அமைந்தது. இதற்கு முந்தைய மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 62 தொகுதிகளை வென்றிருந்தது.
முன்னதாக, 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் இரு இடங்களில் மட்டுமே வென்றது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தலும், 2027-இல் பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் அவினாஷ் பாண்டே, உத்தர பிரதேசத்துக்கு 7 நாள் பயணம் மேற்கொண்டு மாவட்ட அளவிலான நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா். அவா் அளித்த பேட்டி:
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை வேரில் இருந்து வலுப்படுத்தும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 75 மாவட்டங்களில் கட்சியை அமைப்புரீதியாக சீரமைத்து வருகிறோம்.
‘இண்டி’ கூட்டணி இப்போதும் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கும், பிற பிராந்திய கட்சிகளுக்குமான கூட்டணியாகும்.
இதன்மூலம் 2027 பேரவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதற்காக உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். தோ்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சியினா் பணியாற்றுகின்றனா். இதன்மூலமே பாஜகவைத் தோற்கடிக்க முடியும். அடுத்து வரும் தோ்தல்களில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுவாக இருக்கும் என்றாா்.