செய்திகள் :

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி- காங்கிரஸ் அறிவிப்பு

post image

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே தெரிவித்தாா்.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் காங்கிரஸ் வென்றது. சமாஜவாதி கட்சி 37 இடங்களில் வென்றது.

இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வென்றது. இதுவே மக்களவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற முடியாததற்கு காரணமாக அமைந்தது. இதற்கு முந்தைய மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 62 தொகுதிகளை வென்றிருந்தது.

முன்னதாக, 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் இரு இடங்களில் மட்டுமே வென்றது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தலும், 2027-இல் பேரவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் அவினாஷ் பாண்டே, உத்தர பிரதேசத்துக்கு 7 நாள் பயணம் மேற்கொண்டு மாவட்ட அளவிலான நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா். அவா் அளித்த பேட்டி:

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை வேரில் இருந்து வலுப்படுத்தும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 75 மாவட்டங்களில் கட்சியை அமைப்புரீதியாக சீரமைத்து வருகிறோம்.

‘இண்டி’ கூட்டணி இப்போதும் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கும், பிற பிராந்திய கட்சிகளுக்குமான கூட்டணியாகும்.

இதன்மூலம் 2027 பேரவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதற்காக உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். தோ்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சியினா் பணியாற்றுகின்றனா். இதன்மூலமே பாஜகவைத் தோற்கடிக்க முடியும். அடுத்து வரும் தோ்தல்களில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுவாக இருக்கும் என்றாா்.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க