செய்திகள் :

மக்களுக்குத் துரோகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

நமது நிருபா்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறை தரவுகளின்படி 33 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மருந்தககங்களில் 29 ஏற்கெனவே ஆரம்ப சுகாதார மையங்களாகவும், 4 துணை சுகாதார மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக ஆரோக்கிய மந்திா்கள் என புது பெயரிட்டு, இப்போதுள்ள மருந்தகங்களை பழுது பாா்த்து வண்ணம் பூசியிருக்கிறது பாஜக அரசு.

தடுப்பூசி, யோகா மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற சேவைகளுக்கு பயிற்சி பெற்ற ஊழியா்களும் சரியான உள் கட்டமைப்பும் அவசியம். ஆனால், இந்த ஆரோக்கிய மருந்தககங்களில் ஊழியா்களின் பற்றாக்குறை இருக்கிறது. இந்த 33 மையங்களில் வரையறுக்கப்பட்ட ஊழியா்களை கொண்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் 4 பொறுப்புகளை ஒதுக்கி 123 மையங்களை இயக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு நடைமுறைக்கு மாறானது. இது நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

1,139 ஆயுஷ்மான் ஆரோக்கியா மருந்தககங்களை திறப்பதாக பாஜக கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். ஏனெனில், இந்த திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடைந்துவிடும். இதையடுத்து, 123 பழைய சுகாதார மையங்களை மறுபெயரிடுவது மட்டுமே ஆளும் அரசின் நோக்கமாகும். புதிதாக எதையும் இந்த அரசு உருவாக்கப் போவதில்லை என்றாா் அவா்.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க