செய்திகள் :

கைவிடப்பட்ட சிம்பு - 49! ஏன்?

post image

நடிகர் சிம்பு - இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது.

’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் இப்படம் உருவாக இருந்தது.

இதில் சிம்பு கல்லூரி மாணவராகவும் நீண்ட காலம் கழித்து சந்தானம் காமெடியனாகவும் நடிக்க ஒப்பந்தமானது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால், தற்போது இப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

அதேநேரம், நடிகர் சந்தானம் தனக்கான நகைச்சுவைக் காட்சிகளை மாற்றி நாயகனுக்கு இணையான காட்சிகளை எழுதச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. கதாபாத்திர வடிவமைப்பில் சிம்புவுக்கும் சந்தானத்திற்கும் சிறிய பூசல் ஏற்பட்டதாம்.

இதனால், இப்படத்திலிருந்து விலகிய சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சிம்புக்காக நீண்ட நாள் காத்திருந்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்போது வேறு ஹீரோவிடம் கதையைக் கூறி வருகிறாராம்!

இதையும் படிக்க: ஜன நாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஏகே - 64?

நடிகர் அஜித்தின் 64-வது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய... மேலும் பார்க்க

சிம்பு - வெற்றி மாறன் படத்தில் கவின்?

சிம்பு - வெற்றி மாறன் படத்தில் நடிகர் கவின் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக... மேலும் பார்க்க

கடவுள் வேடத்தில் சூர்யா?

நடிகர் சூர்யா தன் 45-வது படத்தில் கடவுள் வேடத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை ... மேலும் பார்க்க

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை திருமண மோசடி செய்தாரா? தொழிலதிபர் புகார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் ... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?

பொன்னி தொடரில் நடித்துவரும் நடிகர் சபரி, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கால், கைகளில் கட்டுப் போட்டவாறு ரசிகர்களுக்காக விடியோ வெளியிட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்... மேலும் பார்க்க

ஸ்டோலன் படக்குழுவைப் பாராட்டிய கமல் ஹாசன்!

ஹிந்தியில் உருவாகி கவனம் பெற்ற ஸ்டோலன் படத்தை நடிகர் கமல் ஹாசன் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில் இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்டோலன் (stolen). கதை நாய... மேலும் பார்க்க