செய்திகள் :

மும்பையில் விமான சேவை பாதிப்பு: இண்டிகோ முக்கிய அறிவிப்பு

post image

மும்பையில் கனமழை பெய்து வருவதால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மும்பையில் இன்று(திங்கள்கிழமை) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை மோசமாக இருப்பதால் விமானப் போக்குவரத்து சேவையும் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது விமானங்கள் இயக்கப்படுவதாகவும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இண்டிகோ தனது எக்ஸ் பக்கத்தில்,

"தற்போது மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் விமானங்கள் புறப்படுவதில் தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து நீங்கள் இன்று பயணம் செய்கிறீர்கள் என்றால், விமானங்கள் தாமதமாகப் புறப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். கூடுதல் நேரமும் பயணிக்க நேரிடலாம். ஏனெனில் வானிலை காரணமாக விமானம் மெதுவாகவே செல்லும்.

நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். விரைவில் விமானங்கள் புறப்பட ஏற்பாடு செய்வோம்.

பயணிகள், புறப்படுவதற்கு முன் எங்களுடைய மொபைல் செயலி அல்லது http://bit.ly/31paVKQ என்ற இணையதளத்தில் நீங்கள் பயணிக்கும் விமானத்தின் நிலவரம் பற்றி தெரிந்துகொள்ளவும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு! - அரசிதழில் அறிவிப்பு வெளியானது

சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வண்டியை வேகமாக ஓட்டியதால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கிய ... மேலும் பார்க்க

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்ல... மேலும் பார்க்க

சத்ரபதி சிவாஜி சிலையைத் தொடரும் துரதிருஷ்டம்: கட்டுமானத்தில் பெரிய ஓட்டை!

மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், ... மேலும் பார்க்க

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க