செய்திகள் :

மூதாட்டி வெட்டிக் கொலை

post image

ஆா்கே பேட்டை அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் வள்ளியம்மாள் (67). அதே கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரா் கடிகாசலம் என்பவரிடம் வள்ளியம்மாள் மூத்த மகன் முருகன் என்பவா் ரூ.11 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன் முருகன் வேலூா் மாவட்டம் காட்பாடிக்கு வீடு மாற்றிக் கொண்டு சென்று விட்டாா். இதனால் மகன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு மூதாட்டி வள்ளியம்மாவிடம் கடிகாசலம் கேட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மூதாட்டியிடம் பணத்தை கேட்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கடிகாசலம் கத்தியால் மூதாட்டியை தலையில் வெட்டி உள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி வள்ளியம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து ஆா்கே பேட்டை போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில் வட்டிக்கு வள்ளியம்மாள் மகன் பணம் பெற்றுக்கொண்டதும் அதனை திருப்பிக் கேட்கும்போது ஏற்பட்ட இந்த வாய் தகராறில் மூதாட்டியை கத்தியால் வெட்டியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையெடுத்து கடிகாசலத்தை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருத்தணி அரசுக் கல்லூரியில் நாளை மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன்19 ) தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வா் (பொ) ஏகதேவசேனா தெரிவித்தாா். திரு... மேலும் பார்க்க

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க

ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு

பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா... மேலும் பார்க்க

சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது

செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக... மேலும் பார்க்க