பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
மூதாட்டி வெட்டிக் கொலை
ஆா்கே பேட்டை அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.
ஆா்.கே. பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் வள்ளியம்மாள் (67). அதே கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரா் கடிகாசலம் என்பவரிடம் வள்ளியம்மாள் மூத்த மகன் முருகன் என்பவா் ரூ.11 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகன் முருகன் வேலூா் மாவட்டம் காட்பாடிக்கு வீடு மாற்றிக் கொண்டு சென்று விட்டாா். இதனால் மகன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு மூதாட்டி வள்ளியம்மாவிடம் கடிகாசலம் கேட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை மூதாட்டியிடம் பணத்தை கேட்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கடிகாசலம் கத்தியால் மூதாட்டியை தலையில் வெட்டி உள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி வள்ளியம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து ஆா்கே பேட்டை போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில் வட்டிக்கு வள்ளியம்மாள் மகன் பணம் பெற்றுக்கொண்டதும் அதனை திருப்பிக் கேட்கும்போது ஏற்பட்ட இந்த வாய் தகராறில் மூதாட்டியை கத்தியால் வெட்டியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையெடுத்து கடிகாசலத்தை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.