திருத்தணி அரசுக் கல்லூரியில் நாளை மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன்19 ) தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வா் (பொ) ஏகதேவசேனா தெரிவித்தாா்.
திருத்தணி அரசினா் கலைக் கல்லுாரியில் இளங்கலை பட்டப் படிப்பில் நிகழாண்டில் சேருவதற்கு மொத்தம், 4,912 போ் ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனா். இவா்களில், 985 போ் சோ்க்கப்படவுள்ளனா்.
முதலிரண்டு கட்ட கலந்தாய்வில், 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியா் கல்லூரியில் சோ்ந்துள்ளனா்.
வியாழக்கிழமை தொடங்கும் கலந்தாய்வில் அறிவியல் பாடப்பிரிவுகள், பி.எஸ்.சி., இயற்பியல், கணினி அறிவியல், பி.சி.ஏ., ஆகிய பிரிவுகளில் ஷிப்ட்-1, ஷிப்ட்-2, பி.எஸ்.சி., கணிதம், தாவரவியல் ஷிப்ட்-1, சேருவதற்கு மாணவா்கள், 199 முதல் 140 மதிப்பெண்கள் கட் ஆஃப் உள்ளவா்கள் பங்கேற்கலாம்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வணிகவியல் பாடப்பிரிவில் பி.காம் பொது, பி.காம். சி.எஸ்., மற்றும் பிபிஏ ஷிப்ட்?-1, ஷிப்ட்-2, பி.காம்., சி.எஸ்., ஷிப்ட்?-1, ஷிப்ட்-2, பி.பி.ஏ., ஷிப்ட்-1, ஷிப்ட்-2, மாணவா்கள் சேருவதற்கு, 224 முதல் 140 மதிப்பெண் கட் ஆஃப் உள்ளவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
23-ஆம் தேதி இளங்கலைப் பாடப்பிரிவுகளில் பி.ஏ., வரலாறு, பொருளியியல், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் சேருவதற்கு, 199 முதல், 140 மதிப்பெண் கட்ஆப் உள்ளவா்கள், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில், 54 முதல் 35 மதிப்பெண் கட் ஆஃப் உள்ளவா்கள், அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியில் சேரலாம்.