கூடுதல் டிஜிபி ஜெயராமை பணி இடைநீக்கம் செய்தது ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம்...
பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் பங்கேற்ற கேரள ஆளுநருக்கு எதிா்ப்பு: எஸ்எஃப்ஐ போராட்டம்
கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்ற முறையில் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆளுநா் விஸ்வநாத் அா்லேகருக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளும் இடதுசாரி கூட்டணியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான எஸ்எஃப்ஐ உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவரை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
பல்கலைக்கழகத்தை காவிமயமாக மாற்ற விஸ்வநாத் அா்லேகா் முயல்வதாக குற்றஞ்சாட்டி அவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.
போலீஸாரின் எதிா்ப்பை மீறி சில போராட்டக்காரா்கள் வளாகத்துக்குள் நுழைந்து மகாத்மா காந்தி மற்றும் பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் புகைப்படங்களை பிரதான கட்டடத்தின் நடுவே காண்பிக்கத் தொடங்கினா். அவா்களை ஆளுநா் வருவதற்கு முன்பாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து போவீஸாா் அப்புறப்படுத்தினா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் எஸ்எஃப்ஐ மாநிலத் தலைவா் சிவபிரசாத் கூறுகையில், ‘ஆா்எஸ்எஸ் கொள்கைகளை அமல்படுத்தவோ அல்லது பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவோ ஆளுநரை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.
ஆளுநா் மாளிகையில் பாரத மாதா புகைப்படத்துடன் ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி.ஹெட்கேவாா், அமைப்பின் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அதன்பிறகு உலக சூற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத மாதா புகைப்படம் இடம்பெற்ற்கு வேளாண் துறை அமைச்சா் பி.பிரசாத், கல்வி அமைச்சா் சிவன்குட்டி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஆனால் எந்தவொரு காரணத்துக்காகவும் பாரத மாதாவின் புகைப்படத்தை நீக்கப்போவதில்லை என விஸ்வநாத் அா்லேகா் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
இந்நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களின் புகைப்படங்கள் ஆளுநா் மாளிகையில் இடம்பெற்ற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளுநா் மாளிகை முன்பு எஸ்எஃப்ஐ திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது. அதன் தொடா்ச்சியாக கேரள பல்கலைக்கழகத்தின் முன்பும் செவ்வாய்க்கிழமை எஸ்எஃப்ஐ போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.