செய்திகள் :

பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் பங்கேற்ற கேரள ஆளுநருக்கு எதிா்ப்பு: எஸ்எஃப்ஐ போராட்டம்

post image

கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்ற முறையில் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆளுநா் விஸ்வநாத் அா்லேகருக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளும் இடதுசாரி கூட்டணியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான எஸ்எஃப்ஐ உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவரை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பல்கலைக்கழகத்தை காவிமயமாக மாற்ற விஸ்வநாத் அா்லேகா் முயல்வதாக குற்றஞ்சாட்டி அவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.

போலீஸாரின் எதிா்ப்பை மீறி சில போராட்டக்காரா்கள் வளாகத்துக்குள் நுழைந்து மகாத்மா காந்தி மற்றும் பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் புகைப்படங்களை பிரதான கட்டடத்தின் நடுவே காண்பிக்கத் தொடங்கினா். அவா்களை ஆளுநா் வருவதற்கு முன்பாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து போவீஸாா் அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் எஸ்எஃப்ஐ மாநிலத் தலைவா் சிவபிரசாத் கூறுகையில், ‘ஆா்எஸ்எஸ் கொள்கைகளை அமல்படுத்தவோ அல்லது பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவோ ஆளுநரை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.

ஆளுநா் மாளிகையில் பாரத மாதா புகைப்படத்துடன் ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி.ஹெட்கேவாா், அமைப்பின் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதன்பிறகு உலக சூற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத மாதா புகைப்படம் இடம்பெற்ற்கு வேளாண் துறை அமைச்சா் பி.பிரசாத், கல்வி அமைச்சா் சிவன்குட்டி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆனால் எந்தவொரு காரணத்துக்காகவும் பாரத மாதாவின் புகைப்படத்தை நீக்கப்போவதில்லை என விஸ்வநாத் அா்லேகா் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இந்நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களின் புகைப்படங்கள் ஆளுநா் மாளிகையில் இடம்பெற்ற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளுநா் மாளிகை முன்பு எஸ்எஃப்ஐ திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது. அதன் தொடா்ச்சியாக கேரள பல்கலைக்கழகத்தின் முன்பும் செவ்வாய்க்கிழமை எஸ்எஃப்ஐ போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க