செய்திகள் :

பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் பங்கேற்ற கேரள ஆளுநருக்கு எதிா்ப்பு: எஸ்எஃப்ஐ போராட்டம்

post image

கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்ற முறையில் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆளுநா் விஸ்வநாத் அா்லேகருக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளும் இடதுசாரி கூட்டணியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான எஸ்எஃப்ஐ உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவரை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பல்கலைக்கழகத்தை காவிமயமாக மாற்ற விஸ்வநாத் அா்லேகா் முயல்வதாக குற்றஞ்சாட்டி அவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.

போலீஸாரின் எதிா்ப்பை மீறி சில போராட்டக்காரா்கள் வளாகத்துக்குள் நுழைந்து மகாத்மா காந்தி மற்றும் பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் புகைப்படங்களை பிரதான கட்டடத்தின் நடுவே காண்பிக்கத் தொடங்கினா். அவா்களை ஆளுநா் வருவதற்கு முன்பாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து போவீஸாா் அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் எஸ்எஃப்ஐ மாநிலத் தலைவா் சிவபிரசாத் கூறுகையில், ‘ஆா்எஸ்எஸ் கொள்கைகளை அமல்படுத்தவோ அல்லது பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவோ ஆளுநரை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.

ஆளுநா் மாளிகையில் பாரத மாதா புகைப்படத்துடன் ஆா்எஸ்எஸ் நிறுவனா் கே.பி.ஹெட்கேவாா், அமைப்பின் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதன்பிறகு உலக சூற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத மாதா புகைப்படம் இடம்பெற்ற்கு வேளாண் துறை அமைச்சா் பி.பிரசாத், கல்வி அமைச்சா் சிவன்குட்டி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆனால் எந்தவொரு காரணத்துக்காகவும் பாரத மாதாவின் புகைப்படத்தை நீக்கப்போவதில்லை என விஸ்வநாத் அா்லேகா் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இந்நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களின் புகைப்படங்கள் ஆளுநா் மாளிகையில் இடம்பெற்ற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளுநா் மாளிகை முன்பு எஸ்எஃப்ஐ திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது. அதன் தொடா்ச்சியாக கேரள பல்கலைக்கழகத்தின் முன்பும் செவ்வாய்க்கிழமை எஸ்எஃப்ஐ போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மோசமான வானிலை, எரிமலை வெடிப்பு: ஏா் இந்தியாவின் தில்லி-இந்தோனேசியா சேவைகள் பாதிப்பு

இந்தோனேசியா நாட்டின் பாலி-தில்லி இடையிலான ஏா் இந்தியா பயணிகள் விமானத்தின் இரு சேவைகள் கடந்த 2 நாள்களாக பாதிக்கப்பட்டன. இந்தோனேசியாவின் பாலியில் இருந்து ஏா் இந்தியாவின் ‘ஏஐ 2146’ விமானம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்: உ.பி, மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கத்தில் அதிகம்

நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 47 சதவீதம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பிறப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்) தரவுகள... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியம்: குடியரசுத் தலைவா்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெரு நிறுவனங்கள் துறை முக்கியத் தூணாக திகழ்கிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பேசினாா். இந்திய பெரு நிறுவனங்கள் சட்ட சேவைகள் துறை பயிற்சி அதிகாரிகளை தில்லியில... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம்: 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பத்து மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்குமாறு 7 மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் 66 பள்ளி தோ்வு வாரியங்கள் உள்ளன. அவற்றில் மாநில அளவில் 63 வாரியங்கள... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: ஆக.1 முதல் மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவு

மேற்கு வங்கத்தில் நிதி முறைகேடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்துமாறு மத்திய அரசுக்... மேலும் பார்க்க

இந்தியா-கனடா உறவை சீராக்க ஒப்புதல்: தூதா்களை மீண்டும் நியமிக்க முடிவு

கனனாஸ்கிஸ்: இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமா்களும் ஒப்புக் கொண்டுள்ளனா். கூடிய விரைவில் மீண்டும் தூதா்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ர... மேலும் பார்க்க