செய்திகள் :

இது 96 காதல் அல்ல, 93 காதல்! முதியவரின் காதலும் நகைக் கடைக்காரரின் மனிதாபிமானமும்!

post image

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில், 93 வயது முதியவர் தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வந்த போது, நெகிழ்ந்துபோன நகைக்கடைக்காரர் ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாங்கல்யம் வழங்கிய விடியோ வைரலாகியிருக்கிறது.

வயதான முதிய தம்பதியான நிவ்ருத்தி ஷிண்டே - சாந்தாபாய், இரண்டு நாள்களுக்கு முன்பு, ஒரு நகைக்கடைக்குள் சென்றுள்ளனர். முதலில் இவரும் ஏதே உதவி கேட்கத்தான் வந்திருப்பார்கள் என்று நனைக்கடை ஊழியர்கள் கருதினார்கள்.

ஆனால், நிவ்ருத்தியோ, தனது மனைவிக்கு மாங்கல்யம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தை நகைக்கடைக்காரர்களிடம் கூறியிருக்கிறார். இந்த தள்ளாத வயதில், தனது மனைவிக்கு தங்க மாங்கல்யம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையோடு வந்த முதியவரின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட நகைக்கடை உரிமையாளரும், அவர்கள் தேர்வு செய்த மாங்கல்யத்துக்கு வெறும் ரூ.20 மட்டும் ஒரு சம்பிரதாயத்துக்காகப் பெற்றுக்கொண்டு நகையைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து நகைக்கடைக்காரர் கூறுகையில், வயதான தம்பதி நகைக்கடைக்குள் வந்தனர். 93 வயது நிவ்ருத்தி தன் கையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த ரூ.1,120 மட்டும் இருந்தது. இவர்களது ஒற்றுமையும் காதலும் எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தேர்வு செய்த மாங்கல்யத்தை வெறும் 20 ரூபாய் பெற்றுக்கொண்ட கொடுத்தோம். அனைவரும் அவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக எனது மனைவியிடம் கண்டிப்பாக ஒரு தங்க நகையாவது வாங்கித் தருவேன் என்று கூறிவந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இறுதியாக ஆயிரம் ரூபாய் சேர்த்துக்கொண்டு நகைக்கடைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவர்கள் எங்களுக்கு பணமே பெற்றுக்கொள்ளாமல் மாங்கல்யத்தைக் கொடுத்துவிட்டனர். இறுதியாக நான் சொன்னபடி என் மனைவி கழுத்தில் தங்க மாங்கல்யம் அணிந்துகொண்டதைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

அவர்களது மகிழ்ச்சியும், தள்ளாத வயதில் இருவருக்கும் இடையிலான அன்பும் மிக அழகாக விடியோவில் பதிவாக, அது சமூக வலைத்தளத்திலும் வைரலாகிவிட்டது.

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்கும்: ஐசிஎம்ஆர் புது முயற்சி!

அரிய வகை ரத்தம் இனி எளிதாக கிடைக்க ஏதுவாக ஐசிஎம்ஆர் புது முயற்சியை எடுத்துள்ளது. ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் மும்பையில் உள்ள தேசிய இம்யூனோ ஹீமெடாலஜி நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக ‘அரிய வகை இரத்தப் ப... மேலும் பார்க்க

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையி... மேலும் பார்க்க

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் ... மேலும் பார்க்க

பிகாரில் பிரதமரின் பேரணிகளுக்கு ரூ.20,000 கோடி செலவு: தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பேரணிகளுக்கு இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, 2014 முதல... மேலும் பார்க்க

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! ஆனால்?

11 மாதங்களுக்கு ரூ.895 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. டேட்டா அதிகம் தேவையில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், ஜியோ அற... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுப... மேலும் பார்க்க