செய்திகள் :

'எத்தனை செய்துள்ளேன்; இருந்தும்..!' - நோபல் பரிசுக்காக புலம்பி தீர்க்கும் ட்ரம்ப்

post image

'அமெரிக்காவிற்கும் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று பிரதமர் மோடி நேரடியாக போன்காலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தெரிவித்தும் கூட, அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.

இந்தப் போன்கால் பேசி முடிந்த அதே நாளில், ட்ரம்ப் மீண்டும், "நான் தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தேன்" என்று தெரிவித்தார்.

இவர் இதை தொடர்ந்து பதிவு செய்து வருவது, 'ஒரு வேளை அவருக்கு நோபல் பரிசு ஆசை இருக்குமோ' என்கிற எண்ணத்தைக் கிளப்பியது.

அசிம் முனீர்
அசிம் முனீர்

அசிம் முனீர் பற்ற வைத்த நெருப்பு!

இந்த எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ட்ரம்ப் ஒரு செயலை செய்தார். அதாவது அமெரிக்காவிற்கு அரசு பயணம் சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், "இந்தியா, பாகிஸ்தான் இடையே ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்து தாக்குதலை நிறுத்தியதற்கு, அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

அதற்கு பரிசாக, உடனே அவருக்கு வெள்ளை மாளிகையில் மதிய விருந்து வைத்தார் ட்ரம்ப். இதை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லியும் உறுதிப்படுத்தியிருந்தார்.

ட்ரம்ப் பதிவு

தற்போது தனக்கு நோபல் பரிசு ஆசை உள்ளது என்பதை மறைமுகமாக தனது சமூக வலைதளப் பக்கத்தின் பதிவு மூலம் ட்ரம்பே உறுதிபடுத்தியிருக்கிறார்.

அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது...

"நான் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உடன் இணைந்து பல ஆண்டுகளாக காங்கோ மற்றும் ருவாண்டா இடையே நடந்து வந்த போரை நிறுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளேன். இது பிற போர்களை விட, மிக அதிகமான ரத்தம் மற்றும் இறப்புகளைப் பார்த்தது ஆகும்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

ருவாண்டா மற்றும் காங்கோ பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டன்னிற்கு வந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்பிரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு மிக சிறந்த தினம் ஆகும். ஆனால், இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதற்கு, செர்பியா, கொசோவோ இடையிலான போரை நிறுத்தியதற்கு, எகிப்து மற்றும் எத்தியோப்பியா போர் நிறுத்தம், மத்திய கிழக்காசியாவில் நான் மேற்கொள்ள வைத்த ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு என எதற்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தம் என நான் எது செய்தாலுமே எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. ஆனால், நான் என்ன செய்கிறேன் என்று மக்களுக்குத் தெரியும். அதுவே எனக்கு போதும்" என்று புலம்பி தீர்த்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நோபல் பரிசு தரலாமா... வேண்டாமா? - உங்கள் கருத்து என்ன?

பாகிஸ்தான் வாங்கும் சீனாவின் 'J-35 ஸ்டெல்த் ஃபைட்டர்' - இந்தியாவுக்கான அச்சுறுத்தலா?

J-35 - இது சீனாவின் இரண்டாவது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் ஃபைட்டர் விமானம் ஆகும். இது கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. J-35 ஸ்டெல்த் ஃபைட்டர்... ஸ்டெல்த் ஃபைட்டர் என்றாலே, அதை ரேடார், சென்சார்... மேலும் பார்க்க

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | களம் 2: Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்... மேலும் பார்க்க

இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா; ஓரணியில் திரண்ட ரஷ்யா, சீனா, வட கொரியா; உலகம் என்ன சொல்கிறது?

இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல்கள் ஒரு வாரத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இந்தத் தாக்குதலினால் மூன்றாம் உலகப் போர் அச்சம், கச்சா எண்ணெய் விலைவாசி உயர்வு, செங்கடல் மற்றும் ஹார்முஸ் பா... மேலும் பார்க்க

TVK: "நாங்க வந்தாலே கரண்ட் கட் பண்றீங்க; ஏன் பயப்படுறீங்க?" - திமுகவை அட்டாக் செய்த என்.ஆனந்த்

'விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டம்!'தவெக தலைவர் விஜய்யின் தனது 51 வது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தவெக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நில... மேலும் பார்க்க

கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!

கீழடி அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இத்துடன் கீழடியில் ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு மதுரையில் மத்திய அரசை... மேலும் பார்க்க