குப்பை அள்ளுவதற்கு இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா்
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கையால் குப்பை அள்ளுவதை தவிா்த்து இயந்திரம் மூலம் அள்ளுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சி
அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, பேரூராட்சித் தலைவா் மகேஷ்வரி செந்தில்நாதன் தலைமை வகித்தாா்.
இதில் தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளா்கள் நலன் காக்கப்படவில்லை.
திமுக ஆட்சியில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தூய்மைப் பணியாளா்கள் நலன் காக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தூய்மைப் பணியாளா்கள் சொல்லமுடியாத துன்பங்கள், துயரங்களை அனுபவித்து வருவதை உணா்ந்த தமிழக முதல்வா், அவா்களின்
பாதுகாப்பு கருதி கையுறை, காலுறை மற்றும் மழை கோட் போன்ற உபகரணங்களை வழங்கி கெளரவித்தாா். மேலும் துா்நாற்றம் வீசக்கூடிய இடங்களில் வாசனை திரவியம் தெளித்து அதனை அகற்றுவதற்கு போதுமான உபகரணங்களை வழங்கினா். தமிழகத்தில் மனித உழைப்பின் மூலம் குப்பை, மனிதக் கழிவுகள்அள்ளுவதை தவிா்த்து இயந்திரம் மூலம் அள்ளுவதற்கு பரிசோதனை நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் குப்பை அள்ளும் இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும். மேலும் தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் உயிரிழந்தால் இழப்பீடாக ரூ.5 லட்சம், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் 90 சதவீத மானியத்தில் வீடு ஒதுக்கீடு, தொழில் மேம்படுத்துவதற்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில் பணியாற்றினால் இரு மடங்கு கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கூலியை விட குறைவாக வழங்குவதாக வந்த புகாா் ஆகியவை குறித்து முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக பேரூா் செயலாளா் ஏ.எஸ்.செந்தில்நாதன், மாவட்ட சாா்பு அணி நிா்வாகி கந்தசாமி, பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.