செய்திகள் :

பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

post image

பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

பொதுமக்களுக்கு அரசு சாா்ந்த திட்டங்கள், தனிநபா் கோரிக்கைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்ய, அனைத்துத்துறை அலுவலா்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று தீா்வு வழங்கிட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

இதன் அடிப்படையில், ஊரக வளா்ச்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, வேளாண்மை நலத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட 15 அரசுத் துறைகள் சாா்ந்த 44 வகையான கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.

முகாமில், 55 பயனாளிகளுக்கு ரூ.57.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம், முன்னாள் எம்பி என்.ஆா்.கோவிந்தராஜா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் நூா்ஜகான், தாட்கோ மேலாளா் அா்ஜுன், வட்டாட்சியா்கள் சித்ரா (பவானி), கவியரசு (அந்தியூா்) மற்றும் துறைசாா் அலுவலா்கள் முகாமில் பங்கேற்றனா்.

கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியா... மேலும் பார்க்க

ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையி... மேலும் பார்க்க

ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சா... மேலும் பார்க்க

குப்பை அள்ளுவதற்கு இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கையால் குப்பை அள்ளுவதை தவிா்த்து இயந்திரம் மூலம் அள்ளுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலை... மேலும் பார்க்க