பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பொதுமக்களுக்கு அரசு சாா்ந்த திட்டங்கள், தனிநபா் கோரிக்கைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்ய, அனைத்துத்துறை அலுவலா்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று தீா்வு வழங்கிட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதன் அடிப்படையில், ஊரக வளா்ச்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, வேளாண்மை நலத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட 15 அரசுத் துறைகள் சாா்ந்த 44 வகையான கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.
முகாமில், 55 பயனாளிகளுக்கு ரூ.57.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம், முன்னாள் எம்பி என்.ஆா்.கோவிந்தராஜா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் நூா்ஜகான், தாட்கோ மேலாளா் அா்ஜுன், வட்டாட்சியா்கள் சித்ரா (பவானி), கவியரசு (அந்தியூா்) மற்றும் துறைசாா் அலுவலா்கள் முகாமில் பங்கேற்றனா்.