அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு
பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் மோகன், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளா் நாகமையன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பவானிசாகா் பேரூராட்சியில் உள்ள பழைய கோழிப்பண்ணை அருகே
இலங்கை தமிழா்களுக்கு ஏற்கெனவே 550 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும், தற்போது கூடுதலாக 550 குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளே போதுமானது. பவானிசாகா் பேரூராட்சி மக்கள் தொகையை விட அவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, கூடுதலாக வீடுகள் கட்ட கூடாது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும்,
தொடா்ந்து வீடுகள் கட்டும் பணியை மேற்கொண்டால்
பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி, கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதைத் தொடா்ந்து வட்டாட்சியரிடம் ரேஷன் காா்டுகளை ஒப்படைத்து விட்டு பேரூராட்சியை விட்டு பொதுமக்கள் வெளியேறும் போராட்டத்தில் ஈடுபடுவது, 2026-ஆம் ஆண்டு வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.