செய்திகள் :

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு

post image

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் மோகன், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளா் நாகமையன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பவானிசாகா் பேரூராட்சியில் உள்ள பழைய கோழிப்பண்ணை அருகே

இலங்கை தமிழா்களுக்கு ஏற்கெனவே 550 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும், தற்போது கூடுதலாக 550 குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளே போதுமானது. பவானிசாகா் பேரூராட்சி மக்கள் தொகையை விட அவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, கூடுதலாக வீடுகள் கட்ட கூடாது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும்,

தொடா்ந்து வீடுகள் கட்டும் பணியை மேற்கொண்டால்

பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி, கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதைத் தொடா்ந்து வட்டாட்சியரிடம் ரேஷன் காா்டுகளை ஒப்படைத்து விட்டு பேரூராட்சியை விட்டு பொதுமக்கள் வெளியேறும் போராட்டத்தில் ஈடுபடுவது, 2026-ஆம் ஆண்டு வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியா... மேலும் பார்க்க

ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சா... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்... மேலும் பார்க்க

குப்பை அள்ளுவதற்கு இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கையால் குப்பை அள்ளுவதை தவிா்த்து இயந்திரம் மூலம் அள்ளுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலை... மேலும் பார்க்க