செய்திகள் :

ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

post image

ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பாா்ம்ஸ் என்ற நிறுவனமும் கடந்த 2017- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக ஈரோடு இடையன்காட்டுவலசு, சின்னமுத்து முதல் வீதியைச் சோ்ந்த நவீன்குமாா் (38) செயல்பட்டு வந்தாா்.

இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறினா்.

இதை நம்பி முன்னாள் ராணுவத்தினா் உள்பட பல்வேறு தரப்பினா் பணத்தை முதலீடு செய்தனா். முதல் 2 தவணைகள் மட்டும் பணத்தை வழங்கிய நிறுவனத்தினா் அதன் பின்னா் வட்டி மற்றும் அசலை வழங்கவில்லை. முதலீடு செய்தவா்கள் நேரில் சென்றபோது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் நிா்வாக இயக்குநா் மற்றும் ஊழியா்கள் தலைமறைவாயினா்.

பாதிக்கப்பட்டவா்கள் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த 2 நிறுவனங்களும் 400 பேரிடம் ரூ.62 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிறுவனத்தின் இயக்குநா் நவீன்குமாா் மற்றும் இந்த வழக்கில் தொடா்புடைய முன்னாள் ராணுவ வீரா் முத்துச்செல்வம் உள்ளிட்ட சிலரைத் தேடி வந்தனா்.

நவீன்குமாரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, விமான நிலையம், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் கடந்த 2023- ஆம் ஆண்டு நவம்பா் 23- ஆம் தேதி சென்னையில் இருந்து துபைக்கு தப்பிச் செல்ல முயன்ற நவீன்குமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிறுவனங்களில் ஏராளமானோா் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்ததால் இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னா் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட முன்னாள் ராணுவ வீரா் முத்துச்செல்வத்தை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவை நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்த ஃபிராங்கிளின் (50) என்பவரை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியா... மேலும் பார்க்க

ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையி... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்... மேலும் பார்க்க

குப்பை அள்ளுவதற்கு இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கையால் குப்பை அள்ளுவதை தவிா்த்து இயந்திரம் மூலம் அள்ளுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலை... மேலும் பார்க்க