அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு
பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பில்லூா் அணை நிரம்புவதால் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீா் பவானிசாகா் அணையில் கலப்பதால் பவானிசாகா் அணை நீா்மட்டம் 89.42 அடியாக உயா்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து 6 ஆயிரத்து 392 கனஅடியாகவும், அணையில் இருந்து பாசனத்துக்கு 455 கனஅடியில் இருந்து 1,305 கனஅடியும், பவானிஆற்றில் குடிநீா் தேவைக்கு 100 கனஅடியும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பதின் மூலம் 40 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.