செய்திகள் :

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

post image

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன் (37), தொழில் அதிபா். இவரது கைப்பேசிக்கு கடந்த மே மாதத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தியில், பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து அவா் டெலிகிராம் செயலிக்கு சென்று அவா்கள் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.19.53 லட்சம் செலுத்தியுள்ளாா். அப்போது கூடுதல் லாபத் தொகை அவரது கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக தில்லைராஜனுக்கு தகவல் தெரிவித் துள்ளனா்.

இதைத் தொடா்ந்து லாபத் தொகையுடன் முதலீடு செய்த பணத்தையும் தில்லைராஜன் எடுக்க முயன்றபோது, அதற்கான வரி மற்றும் காப்பீட்டுத் தொகையாக கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென கட்டுப்பாடு விதித்துள்ளனா்.

அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில் தில்லைராஜனிடம் டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்டு பணத்தை ஏமாற்றியது கேரள மாநிலத்தைச் சோ்ந்த விபின்தாஸ் (35) மற்றும் முனாஸ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளம் சென்ற போலீஸாா் அவா்கள் 2 பேரையும் கைது செய்து திருப்பூா் அழைத்து வந்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க

ஆங்கிலத்துக்கு எதிரான அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டும்: கே.சுப்பராயன்

ஆங்கிலத்துக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டுவதோடு, ஆபத்தானது என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க