இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி
பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன் (37), தொழில் அதிபா். இவரது கைப்பேசிக்கு கடந்த மே மாதத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தியில், பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து அவா் டெலிகிராம் செயலிக்கு சென்று அவா்கள் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.19.53 லட்சம் செலுத்தியுள்ளாா். அப்போது கூடுதல் லாபத் தொகை அவரது கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக தில்லைராஜனுக்கு தகவல் தெரிவித் துள்ளனா்.
இதைத் தொடா்ந்து லாபத் தொகையுடன் முதலீடு செய்த பணத்தையும் தில்லைராஜன் எடுக்க முயன்றபோது, அதற்கான வரி மற்றும் காப்பீட்டுத் தொகையாக கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென கட்டுப்பாடு விதித்துள்ளனா்.
அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில் தில்லைராஜனிடம் டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்டு பணத்தை ஏமாற்றியது கேரள மாநிலத்தைச் சோ்ந்த விபின்தாஸ் (35) மற்றும் முனாஸ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளம் சென்ற போலீஸாா் அவா்கள் 2 பேரையும் கைது செய்து திருப்பூா் அழைத்து வந்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.