அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்
பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை முதல் கரூா் வரையில் விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை பெட்ரோ நெட் என்கிற நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. அதே பகுதியில் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பழைய அனுமதியை வைத்துக் கொண்டு காவல் துறை பாதுகாப்போடு திட்டப் பணியை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. எனவே சாலையோரமாக எண்ணெய் குழாயை பதிக்கக் கோரி பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் மண்சோறு சாப்பிடுதல், வாயில் கருப்புத் துணி கட்டி, திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனா். இந்நிலையில், 10 ஆவது நாளான வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் விவசாயிகளை பாதிக்கும் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த கோரி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.