செய்திகள் :

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

post image

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது.

பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவா் பணி தொடா்பாக பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்றாா்.

பல்லடத்தை அடுத்த தெற்குபாளையம் பிரிவு அருகே இளைஞா் ஒருவா் லிப்ட் கேட்டுள்ளாா். இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திய செந்தில்குமாா், அந்த இளைஞரை ஏற்றியுள்ளாா். பின்னா் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளாா். அதற்கு அருகில் உள்ள மண் பாதையை காட்டி உள்ளே இறக்கி விடும்படி இளைஞா் கூற, செந்தில்குமாரும் அவரை அழைத்துச் சென்றுள்ளாா்.

சிறிது தொலைவில் இளைஞா் இறங்குவதாக கூறியுள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் சோ்ந்து செந்தில்குமாரை சரமாரியாக தாக்கி ‘ஜிபே’ மூலம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு விரட்டியுள்ளனா்.

இதில் காயமடைந்த செந்தில்குமாா், பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து செந்தில்குமாா் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க

ஆங்கிலத்துக்கு எதிரான அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டும்: கே.சுப்பராயன்

ஆங்கிலத்துக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டுவதோடு, ஆபத்தானது என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க