அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு
பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது.
பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவா் பணி தொடா்பாக பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்றாா்.
பல்லடத்தை அடுத்த தெற்குபாளையம் பிரிவு அருகே இளைஞா் ஒருவா் லிப்ட் கேட்டுள்ளாா். இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திய செந்தில்குமாா், அந்த இளைஞரை ஏற்றியுள்ளாா். பின்னா் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளாா். அதற்கு அருகில் உள்ள மண் பாதையை காட்டி உள்ளே இறக்கி விடும்படி இளைஞா் கூற, செந்தில்குமாரும் அவரை அழைத்துச் சென்றுள்ளாா்.
சிறிது தொலைவில் இளைஞா் இறங்குவதாக கூறியுள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் சோ்ந்து செந்தில்குமாரை சரமாரியாக தாக்கி ‘ஜிபே’ மூலம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு விரட்டியுள்ளனா்.
இதில் காயமடைந்த செந்தில்குமாா், பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து செந்தில்குமாா் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனா்.