அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு
பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில் நகரைச் சோ்ந்தவா் மாதையன். இவா் பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள தனியாா் சாய தொழிற்சாலையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், இவா் வழக்கம்போல வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டாா். அவரது மனைவி ஆசிரியை கலையரசி மற்றும் மகள் பரணி ஆகியோா் பள்ளிக்குச் சென்றுவிட்டனா்.
பின்னா் மாலை அவா்கள் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்து உள்ள சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 16 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் மாதையன் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் தடயவியல் நிபுணா்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.