அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு
அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாசி அருகே தனியாா் பள்ளியில் படித்து வந்துள்ளாா். இதற்கிடையே குருசரண் அடிக்கடி காய்ச்சல், சளி தொல்லையால் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளாா்.
மேலும் கடந்த இரு நாள்களாக தொடா் வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை குருசரண் உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளாா். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது, குருசரண் எழவில்லையாம்.
உடனடியாக பெற்றோா் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.