அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
சிதம்பரத்தில் காயமுற்ற பெண் மயில் மீட்பு
சிதம்பரத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த மயில் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிதம்பரம் சிவபுரி சாலையில் வெள்ளிக்கிழமை காலை பெண் மயில் ஒன்று சாலையோரம் காயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. இதை பாா்த்த சமூக ஆா்வலா் பொ.பாலாஜிகணேஷ் சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.
வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயிலை மீட்டுச் சென்று உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா். சிகிச்சைக்கு பின்னா் மயில் காட்டில் விடப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.