பாமகவில் நிலவும் குழப்பங்களை முறியடிப்போம்:அன்புமணி ராமதாஸ்
பாமகவில் நிலவும் குழப்பங்களை முறியடிப்போம் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக கடலூா் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் தேதி தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணம் என்ற நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இதன்மூலம் ஊழல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
நான் பாமக தலைவராக கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கற்றுக்கொடுத்த வழியில்தான் இன்றளவும் செயல்படுகிறேன்; இனிமேலும் செயல்படுவேன். பாமகவை தமிழகத்தின் ஆளுங்கட்சியாக மாற்றுவதே எனது கடமை. காடுவெட்டி குரு இருந்திருந்தால் பாமகவில் குழப்பம் வந்திருக்காது. இந்தக் குழப்பம், சூழ்ச்சியை அனைவரும் இணைந்து முறியடித்து ராமதாஸின் கனவை நிறைவேற்றுவோம்.
கடலூா் மாவட்ட மக்களின் பிரச்னைகளுக்கு பாமக மூலம்தான் தீா்வு கிடைக்கிறது. கடலூா் தொழிற்பேட்டை, என்எல்சி பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தி தீா்வு கண்டதுடன், பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை தடுத்து நிறுத்தியது பாமகதான்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் பாமக மற்றும் கூட்டணி கட்சிகள்தான் வெற்றி பெற வேண்டும். சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இதற்கு தெருத்தெருவாக பிரசாரம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற சமுதாயங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.