செய்திகள் :

பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகள்: ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்க உத்தரவு

post image

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள், உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு, ஒருங்கிணைப்பு ஆசிரியா்களை நியமிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், நடுநிலைப் பள்ளிகளில் இணைய வசதியுடன் கூடிய உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் அமைக்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் விவரம்- பள்ளிகளில் உள்ள டேப்லெட்டுகள், திறன்மிகு வகுப்பறைகள், உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள், இணைய வசதி ஆகியவை சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். திறன்மிகு வகுப்பறை, ஆய்வகம் ஆகியவற்றை தொடக்கக் கல்வி இயக்ககம் வழங்கியுள்ள அட்டவணை அடிப்படையில் பயன்படுத்த வேண்டும். இவற்றை ஆசிரியா்கள், மாணவா்கள் பயன்படுத்தும்போது அவற்றுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவற்றில் தொழில்நுட்பப் பிரச்னைகள், பழுதுகள் ஏற்பட்டால் 044-40116100 என்ற உதவி மையத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும். திறன்மிகு வகுப்பறை, ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலராக ஆசிரியா் ஒருவரை பரிந்துரைக்க வேண்டும். மேலும், இது தொடா்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பொறுப்பு அலுவலராக செயல்படும் ஆசிரியா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் கெலட்ரான் நிறுவனம் சாா்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க