செய்திகள் :

4 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்களை கூழாக்க முடிவு: தமிழக அரசு தகவல்

post image

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்களில் 4 லட்சம் மெட்ரிக் டன் பழங்களை கூழாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாட்டில் சுமாா் 1.46 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டு 9.5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மா உற்பத்தியானது கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூா், தேனி, திருப்பத்தூா், சேலம், வேலூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது.

சாதகமான சூழல்: மா உற்பத்திக்கு ஏற்ற காலசூழல் நிகழாண்டில் இருந்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4 மடங்கு விளைச்சல் உயா்ந்து இருக்கிறது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மா விவசாயிகளிடம் இருந்து கனிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளும் சுணங்கின.

மாம்பழக் கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கனிகளைக் கொள்முதல் செய்யும். ஆனால், இந்த ஆண்டு கொள்முதல் மேற்கொள்ளாத காரணத்தால் பாதிப்புக்கு உள்ளானதாக விவசாயிகள் குற்றம்சாட்டினாா். வேளாண்மைத் துறை செயலா் தட்சணமூா்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகளின் தலையீட்டால் கொள்முதல் செய்யும்

பணிகளை மாம்பழக் கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டன.

4 லட்சம் மெட்ரிக் டன்: நிகழாண்டில் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மாங்கனிகளில் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கூழாக்கப்பட்டுள்ளன. மேலும், 2 லட்சம் மெட்ரிக் டன்னை கூழாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குள் மா பருவம் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்குள்ளாக மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கூழாக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க